Thursday, August 20, 2009

மழைக்கால நிலவு:

மழைக்கால நிலவு:
மழைக்கால குளுமை நாளில் கருந்தோகை போர்த்திய மேகம் மறைத்த நிலவு மறைக்க மேகமற்ற நிலவாய் நடைபாதையில் அவள்..!!! சில நொடி எதிர்ப்பட்டு மறைகையில் பரிமாறி மறைந்த பார்வை, புன்னகை... கடந்து அடுத்த அடி முத்தமிடளுக்காய் காத்திருக்கும் பூமியின் எதிர்பார்ப்பை நிறைத்திருந்த கொலுசொலி..!!! ஆழ மனதில், ஓர இடத்தில் தேங்கிய மழைக்கால நிலவாய் தாவணி பெண்ணே அவள்!!! கால விழுங்கலில் பல தாவணிகள் சில கொலுசொலிகள் ஒன்றுமே தீண்டவில்லை அவளின் ஆழத்தை!!! மழைக்கால் மேகத்தை விளக்கி நிலவை தேடும் குழந்தை போல தேடுகிறேன் அந்த மழைக்கால நிலவை கொலுசொலி கேட்கும் திசை எங்கும்.. திசை அறியா குழந்தை போல!!!!!!
உங்கள் சேவகன்...,
பாலாஜி

கவிஞர் தாமரை.....


தாமரை :

தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்.
கோவையில் பிறந்த தாமரை, எந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகியவற்றையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இயக்குனர்
சீமானின் "இனியவளே" திரைப்படத்திற்காக தென்றல் எந்தன் நடையைக் கேட்டது என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக[1] தாமரை அறிமுகமானார். "வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ... எனப் புகழ்மிக்க பாடல்கள் உள்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். தனக்கென ஒரு கொள்கை, வழிமுறை, இலக்கு ஆகியவற்றைக் கொண்ட இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார்[2]. திரையிசைத்துறையில் இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி மிகச்சிறந்த வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.