Thursday, August 20, 2009

மழைக்கால நிலவு:

மழைக்கால நிலவு:
மழைக்கால குளுமை நாளில் கருந்தோகை போர்த்திய மேகம் மறைத்த நிலவு மறைக்க மேகமற்ற நிலவாய் நடைபாதையில் அவள்..!!! சில நொடி எதிர்ப்பட்டு மறைகையில் பரிமாறி மறைந்த பார்வை, புன்னகை... கடந்து அடுத்த அடி முத்தமிடளுக்காய் காத்திருக்கும் பூமியின் எதிர்பார்ப்பை நிறைத்திருந்த கொலுசொலி..!!! ஆழ மனதில், ஓர இடத்தில் தேங்கிய மழைக்கால நிலவாய் தாவணி பெண்ணே அவள்!!! கால விழுங்கலில் பல தாவணிகள் சில கொலுசொலிகள் ஒன்றுமே தீண்டவில்லை அவளின் ஆழத்தை!!! மழைக்கால் மேகத்தை விளக்கி நிலவை தேடும் குழந்தை போல தேடுகிறேன் அந்த மழைக்கால நிலவை கொலுசொலி கேட்கும் திசை எங்கும்.. திசை அறியா குழந்தை போல!!!!!!
உங்கள் சேவகன்...,
பாலாஜி

No comments:

Post a Comment